தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, கீழ்மொரப்பூரில் இன்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாமிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியை திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யாதனபால் துவக்கி வைத்தார். முன்னதாக அந்த கிராமத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் 100 ஆண்களுக்கு திமுக கரை வேட்டி வழங்கி,அங்கு நடைபெற்ற வாலிபர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில ஆதிதிராவிடர் நல குழு துணை செயலாளர் ராஜேந்திரன், அரசு கூடுதல் வழக்கறிஞர் சேகர், திமுக கட்சி பொறுப்பாளர்கள் குள்ளு கவுண்டர், முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
.gif)
