Type Here to Get Search Results !

அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறாதவர்கள் இன்றுமுதல் பெற்றுக்கொள்ளலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தருமபுரி மாவட்டத்தில்‌ இதுவரை பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு பெற்றுக்கொள்ளாதவர்கள்‌ இன்று (17.01.2022) முதல்‌ நியாயவிலைக்கடைகளில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள்‌ தகவல்‌ இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள்‌ தெரிவித்துள்ளதாவது:

தமிழர்‌ திருநாளான பொங்கல்‌ பண்டிகையை அனைவரும்‌ சிறப்பாக கொண்டாடும்‌ பொருட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள்‌ அடங்கிய பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு வழங்கிட தமிழக அரசால்‌ அறிவிக்கப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில்‌ ஜனவரி 4ந்‌ தேதி முதல்‌ அனைத்து நியாயவிலைக்கடைகள்‌ மூலம்‌ அரிசி பெறும்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள்‌ அடங்கிய பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை பொங்கல்‌ பரிசு தொகுப்பினை பெறாமல்‌ உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அதனை வழங்கும்‌ விதமாக இன்று (17.01.2022) பொது விநியோகத்திட்ட நியாயவிலைக்கடைகள்‌ செயல்படும்‌ என அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பொது விநியோகத்திட்ட நியாயவிலைக்கடைகளில்‌ இன்று (17.01.2022) காலை 7.00 மணி முதல்‌ பொங்கல்‌ பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்‌. இது வரை பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பினை வாங்காமல்‌ விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ தங்கள்‌ பகுதியில்‌ உள்ள பொதுவிநியோகத்திட்ட நியாயவிலைக்‌ கடைகளுக்கு சென்று அதனைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies