தமிழகம் முழுவதும் ஞாயிறு தினத்தன்று முழு ஊரடங்கு இரண்டாவது நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளிய வர தடை உள்ளது. அரசு பேருந்துகள் மட்டுமன்றி மற்ற வாகனங்கள் இயக்குவதற்கு தடை உள்ள நிலையில் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது பர்கூரை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊரடங்கு மதிக்காமல் சுற்றுலா வந்ததை காவல்துறை மடக்கிப்பிடித்தனர். இவர்கள் பர்கூரில் ஊரடங்கு மதிக்காமல் சுற்றுலா வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடுமையாக எச்சரித்த காவல்துறையினர் தண்டத் தொகை விதித்து அனுப்பி வைத்தனர்.
.gif)
