Type Here to Get Search Results !

கால்நடைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கு பெரிதும் துணைபுரிவது கால்நடைகள். இயந்திரமயமாக்கல் காரணமாக வேளாண் பணிகளில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்ப்பு அதிக அளவில் உள்ளது. கால்நடை தீவனம் பற்றாக்குறை, போதுமான தண்ணீர், உணவு கிடைக்காதது உள்ளிட்டவற்றால் கால்நடைகள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

கால்நடைகளுக்கு தேவையான வைக்கேல், புற்கள் இல்லாததால் தெருக்களிலும், சாலையோரத்திலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை நாடும் சூழலுக்கு கால்நடைகள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு சாலையோரம் கிடக்கும் குப்பைகளை உண்ணும்போது கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளுக்கு எமனாக மாறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்திருந்தாலும் அவற்றின் பயன்பாடு குறைந்துவிடவில்லை.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை கிடங்காக உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மாடுகளுக்கு உணவாகிறது. இந்நிலையில் குப்பை கழிவுகள் , பிளாஸ்டிகை உண்ணும் கால்நடைகளின் உடல் பல நோய்களுடன் ஆபத்தான நிலமையை சந்திக்கும் . 

கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கொடுக்காமல் , போதிய பராமரிப்பு இன்றியும் சாலையிலே கால்நடைகளை மேய்சலுக்கு விடுகின்றனர். தகுந்த பராமரிப்பு இன்றி சாலையிலே விடப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies