Type Here to Get Search Results !

மத்திய அரசின் தமிழக விரோத செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வருகின்ற ஜனவரி 26 ம் நாள்  குடியரசு தினத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் அனைத்து மாநில மக்களின் பண்பாடு கலாச்சாரத்தை, விடுதலை போராட்ட வரலாற்றை பறைசாற்றும் அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலை போராட்டத்தை முதன் முதலில் முன்னெடுத்த தமிழர்களின் வீர வரலாற்றை மறைக்கும் முகமாக ஒன்றிய அரசு இந்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆகியோர் உருவம் பொறித்த வாகனம் தகுதியற்றது என ஒன்றிய அரசு மறுத்துவிட்டது.

இத்தகைய மத்திய அரசின் தமிழக விரோத செயலை கண்டித்து இன்று  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் விஜயபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி. மாதையன் கண்டன உரையாற்றினார்.

இதில் வட்டார செயலாளர் பி. முனியப்பன், துணை செயலாளர் பி.சம்பத், நகர துணை செயலாளர் இல. தர்மராஜா, மாவட்ட குழு உறுப்பினர் கவுன்சிலர் நாகராஜ், வட்டார குழு உறுப்பினர்கள் சண்முகம், கோவிந்தராஜ், முனுசாமி, மூர்த்தி, உள்ளிட்ட தோழர்கள்  திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இறுதியில் நகர துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies