Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன் சாவு

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மகன் ரஞ்சித்குமார் வயது 16. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினரின் காரிய நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த  ரஞ்சித்குமார் மற்றும் குடும்பத்தினர் முதலைப்பண்ணை காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார்.

ரஞ்சித்குமார் ஆற்றில் மூழ்கியதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராஜா, ரஞ்சித் குமார், இளங்கோவன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கி ரஞ்சித்குமாரை மீட்டனர். உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட ரஞ்சித்குமார் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் ரஞ்சித்குமார் இறந்துவிட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரி ஆற்றில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் ஆற்றில் மூழ்கி இருக்கும் சம்பவங்கள் அதிகளவில் உள்ளது. எனவே உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதியை ஒகேனக்கலில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies