Type Here to Get Search Results !

தடங்கம் மேம்பாலத்தில் பால்கோவா லாரி கவிழ்ந்து விபத்து.

காவேரிபட்டினத்தில் இருந்து லாரியில் சேலம் மாவட்டம் மூங்கில் பட்டியைச் சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 37), சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்த ராஜேஷ் (48) ஆகியோர் இருவரும் பால்கோவா ஏற்றுக்கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நேற்று மதியம் தேசிய நெடுஞ்சாலை தடங்கம் பாலத்தின் மீது சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கண்ணன், ராஜேஷ் ஆகியோர் காயமின்றி உயிர்தப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies