Type Here to Get Search Results !

படகில் ஒரு பரிதாப பயணம்: பாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், ஒட்டனூர்- கோட்டையூர் பரிசல் துறை. ஒருபுறம் தர்மபுரி மாவட்டத்தின் கடைக்கோடி, மறுபுறம் சேலம் மாவட்டம். இந்த இரு மாவட்டங்களையும் காவிரி ஆறு இணைக்கிறது. 

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் வேலைக்காக வெளியூர் செல்ல மிகவும் அதிகம் பயன்படுத்தும் கோட்டைகள் பரிசல் துறை இன்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.  பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று திரும்பிய பொதுமக்கள் வெளியூர் செல்ல அதிகாலை 5 மணி முதல் பரிசல் துறையில் பயணம் செய்ய துவங்கினர், படகில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

ஒரு படகில் 4, 5 பரிசில்களை கயிறுகளால் இணைத்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர், விழா காலம் என்பதால் இன்று மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசலில் பயணம் செய்தனர். 

இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் இன்றுவரை அது கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து படகில் சவாரி செய்வது பரிதாபமாக உள்ளது. படகில் சவாரி செய்ய ஒரு நபருக்கு ரூ 15ம், ஒரு இரண்டு சக்கர வாகனத்திற்கு ரூ 30ம் வசூலித்து வருகின்றனர், இந்த ஒட்டனூர்- கோட்டையூர் பரிசல் துறை, கடந்த ஆண்டு ரூபாய் 45 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies