Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கலைகட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தலம்.

ஞாயிறு விடுமுறை நாளான இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கலைகட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தலம்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்நிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கிய நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது, இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு ஞாயிறுதோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின்றி ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தநிலையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமையான  இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். சுற்றுலாப்பயணிகள் பரிசல் சவாரி செய்தும் மீன் சமையல் அருந்தியும் மகிழ்ந்தனர். 

இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் அருவிகளில் குளிக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விதித்த தடை தொடர்ந்து நீடித்து வருவதால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884