இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன், குடிமகள் ஆகியோர் அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் வகையில்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கடைப்பிடிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர்களுடன் ஏற்க்கப்பட்ட உறுதிமொழியில் தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும், தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டோம், எனவும், அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடன் உண்மையுடன் பணியாற்றுவோம் என்பது கடமையாகும்.
இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுபற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.