கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள கட்டுர் சுடுகாட்டில் நண்பர்களான பழனி, விஜய் மற்றும் சாமி ஆகிய மூன்றுபேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது, அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராரில் சாமி மற்றும் விஜய் இருவரும் அருகிலிருந்த கல்லை தூக்கி பழனி தலை மற்றும் மார்பு மீது கல்லால் பயங்கரமான தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்க்கு சென்ற கெலமங்கலம் போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர், மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்.
.gif)
