Type Here to Get Search Results !

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சதிவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (07.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரியாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இஆப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரங்கள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பெரியாம்பட்டி சுகாதார பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது முறையாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார், அதனைத் தொடர்ந்து பெரியாம்பட்டி, இண்டமங்கலம், கோவிலூர், பைசு அள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் சாலை அமைத்தல், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி கலைச்செல்வி, திரு. கிருஷ்ணன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies