Type Here to Get Search Results !

விபத்தில் சிக்கிய லாரி; சாலையில் ஆறாக ஓடிய பீர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை நோக்கி செல்லும் சாலையில் உள்ளது மிட்டப்பள்ளி என்ற கிராமம் அதன் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே  மதுபானங்களை ஏற்றி வந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

இதில் ஏற்றிவரப்பட்ட எஸ்என்ஜே என்ற மதுபான வகையைச் சேர்ந்த பீர் பாட்டில்கள் மட்டும் ஏற்றி வந்தது தெரியவந்தது இதில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் ஏற்றி வந்ததாகவும் வாகன கோளாறு ஏற்பட்டதால் வாகனம் கீழே விழுந்ததாகவும் கூறுகின்றனர்.

ஓட்டுநர் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய லாரி ஓட்டுனர் கூறியதாவது: 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் ஏற்றி சென்றதாகவும் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் கூறுகின்றனர், மேலும் அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் மதுபான வகைகளை அங்கிருந்து கைப்பற்றி எடுத்துச் செல்லும் அவல நிலையும் அரங்கேறி உள்ளது.

இதனைத் தொடர்ந்து சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜா அவர்கள் விரைந்து வந்து சக காவலர்களுடன் அங்கிருந்த பொதுமக்களை விரட்டி அடித்து பிறகு அங்கிருந்த மதுபானங்களை பாதுகாத்து வைத்தார் மேலும் மாற்று வாகனத்தில் இந்த மதுபான ஏற்றுமதியில் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies