Type Here to Get Search Results !

8 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது.

நல்லம்பள்ளி - தடங்கள் அருகில் அத்தியமான்கோட்டை உதவி ஆய்வாளர் ராஜேஷ் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது, அதன் மதிப்பு சுமார் 8இலட்சம் ஆகும்.

இந்த கடத்தலில் மிட்டாநுளஅள்ளியை சார்ந்த பிரபாகரன், நரசிம்மன் மற்றும் குமாரசாமிபேட்டையை சார்ந்த மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், இது குறித்து அத்தியமான்கோட்டை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies