பாலக்கோடு பேரூராட்சியில் 73 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் டார்த்தி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.
குழந்தைகளுக்கு தேச தலைவர்கள் பற்றிய புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார், முன்னதாக பேரூராட்சி முன்பு உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை கணக்காளர் அபுபக்கர் மற்றும் அலுவலர்கள் தூய்மை காவலர்கள் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
.gif)
