பர்கூர் அருகே பாலேதோட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வினர் ஏராளமானோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பாலேதோட்டம் ஊராட்சியில் அலுவலகத்தில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
.gif)
