இக்கழகம் குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகின்றது.
சிறு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ரோடு, தருமபுரி மாவட்ட மேம்பாட்டுக் கழக கட்டிட முதல் தளத்திலுள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தருமபுரி கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை 08.12.2021 புதன்கிழமை முதல் 15.12.2021 புதன்கிழமை வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.
இச்சிறப்பு தொழில் கடன் முகாம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (T.II.C) பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (25% மூலதன மானியம், 6 விழுக்காடு வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.75.00 இலட்சம் வரை வழங்கப்படும். இச்சிறப்பு முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NEEDS) ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு 04342- 260866,260272 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.