Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கால்நடைகளை தாழ்வெப்பநிலையிலிருந்து பாதுகாக்க கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

பருவமழை காலங்களில் கால்நடைகளின் உடல் வெப்பநிலை சாதாரண அளவான (1071-102.5F) அளவிலிருந்து 96F அளவு குறையும் பொழுது கால்நடைகள் தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதப்படுகிறது.

கால்நடைகளின் உடல் வெப்பநிலை பின்வரும் காரணங்களால் தாழ்வெப்பநிலையை அடைகிறது தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் இருப்பது, குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் ஈரமான தரை, பாதகமான சீதோஷண நிலையினால் போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காதது, ஈரமான மண் உடன் கூடிய இருப்பிடம், சரிவர நீர் வடியாத கொட்டகை மேலும், உடல் தாழ்வெப்பநிலையின் போது தோன்றும் அறிகுறிகள் கால்நடைகள் சோர்வாகவும் தீவனம் எடுக்காமலும் நிற்க முடியாமலும் படுத்து இருக்கும், மூட்டு பகுதிகள் குளிர்ந்து காணப்படும், உடல் நடுக்கம், அதிக இதய துடிப்பும் மூச்சிரைப்பும் காணப்படும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.

கால்நடைகளை பின்வரும் உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் பராமரிக்கலாம் கால்நடைகள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளிலிருந்து உடனடியாக அவற்றை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும், காய்ந்த துணி சாக்கு அல்லது வைக்கோலை தரையில் பரப்பி அதன் மேல் படுக்க வைக்க வேண்டும், கொட்டகையில் தண்ணீர் தேங்கி இல்லாமலும் குளிர்ந்த காற்று வீசாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், குடிப்பதற்கு சற்று சூடான தண்ணீரும் உரிய தீவனமும் குடுக்க வேண்டும், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சற்று சூடேற்றப்பட்ட குளுக்கோஸ் திரவத்தை இரத்த குழாய் வழியாக உடலுக்குள் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி கால்நடைகளை தாழ்வெப்பநிலையிலிருந்து பாதுகாக்க கொள்ள வேண்டும் எனவும், கால்நடைகளிடம் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடைமருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884