தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி இருந்து பாலக்கோடு நோக்கிவரும் அரசு பேருந்தில் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் 5ம் எண் பேருந்தில் பாலக்கோடு வந்து செல்கின்றனர்.
அதன் காரணமாக பள்ளிமாணவா்கள் மற்றும் கல்லுரி மாணவா்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். சில பள்ளி மாணவா்கள் அரசு பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துனா்களை ஒருமையில் பேசியும், தகராறில் ஈடுபட்டு வரும் .சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கல்லுரி மற்றும் பள்ளி மாணவா்கள் மிரட்டலால் பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துனா் கடும் மன உழைச்சலுடன் பணி செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே பள்ளி, கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.