தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசியதாக திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்பு ஒலிபெருக்கி மற்றும் நாற்காலிகளைத் தூக்கி வீசி பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக திமுகவினரை வன்மையாக கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கூறினர்.
நாம் தமிழர் கட்சியின் அரூர் தொகுதி சட்டமன்ற செயலாளர் தலைமையில் மொரப்பூர் காவல் நிலையத்தில் திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.
மேலும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் இரு கட்சியினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் செயல்பட்ட திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் இ.டி.டி. செங்கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர்.
Tags
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.