Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட குழுயில் விழுந்தவர் பலி.

Top Post Ad

காரிமங்கலம் அருகே உள்ள ஆலமொரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் ரமேஷ் (வயது 25). இவர் அங்குள்ள தனியார் பால் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 

நேற்று முன்தினம் இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக அனுமந்தபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் மோட்டார் சைக்கிளுடன் ரமேஷ் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884