தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராசபாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவருடைய மகள் பூர்விகா( வயது 19) இவரும், அதேபகுதியை சேர்ந்த உறவினர் சிவபிரசாத் (27) என்பவரும் காதலித்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த பூர்விகா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கர்ப்பிணியான பூர்விகா தற்கொலை செய்து கொண்டது குறித்து அரூர் உதவி கலெக்டர் முத்தையா விசாரணை நடத்தினார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பூர்விகாவை தகாத வார்த்தையால் பேசி தற்கொலைக்கு தூண்டியது தெரிந்தது. இதையடுத்து பூர்விகாவின் கணவர் சிவபிரசாத், மாமியார் கவிதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக