தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஷ் மாற்றம் செய்யப்பட்டு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக தவமணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் கோவை சிறுமுகை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சிறப்பாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
புதியதாக பொறுப்பேற்று கொண்ட இன்ஸ்பெக்டருக்கு தவமணிக்கு எழுத்தர் சின்னசாமி, உதவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், கருணாகரன், செந்தில், வடிவேல் மற்றும் போலீசார் அணிவகுப்பு மரியாதை (பரேட்) செலுத்தினர்.