கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒண்டியூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக மின் பற்றாக்குறை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டதாக கிராம மக்கள் அரசு அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது .
கிராம மக்கள் கூறுகையில் கிராமத்தில் போதிய மின் பற்றாக்குறையால் விவசாயம் , குடிநீர் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறினார் . மக்களின் குறையை கண்ட சம்மந்தப்பட்ட துறையினர் தற்போது ஒண்டியூர கிராமத்தில் மின்சார பற்றாக்குறையை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான மின் இணைப்புகள் வழங்கப்பட்டது .
தங்களது கிராமத்திற்க்கு மின் இணைப்புகள் கிடைத்த மகிழ்ச்சியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்களும் நன்றியை தெரிவித்தனர் ஒண்டியூர் கிராம மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக