Type Here to Get Search Results !

வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை நிரம்பி ஆற்றில் வெளியேறும் தண்ணீர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலையில் உருவாகும் வரட்டாறு, காட்டாறு, மற்றும் காரப்பட்டி மலைப்பகுதியில் உருவாகும் காட்டாறு என 3 ஆறுகள் இணைந்து வள்ளிமதுரை, கீரைபட்டி, கெளாப்பாறை வழியாக பாய்ந்தோடி அரூர் நகரின் வடக்கே 2 கி.மீ தூரத்தில் வாணியாற்றில் கலக்கின்றது. 

இந்த ஆற்றின் குறுக்கே வள்ளிமதுரை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுயுள்ளது. தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடும் உயரம்  34.5 அடியாகும், இந்த தடுப்பணை மூலம் கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடும்பியாம்பட்டி, கூக்கடப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடியாம்பட்டி, ஈட்டியம்பட்டி . கம்மாளம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உட்பட 15க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள 25 க்கு மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமித்து பயன் பெறலாம்.

அணையின் இடதுபுற, வலதுபுற கால்வாய் மூலம் நேரடியாக 2853 ஏக்கர் நிலமும், ஏரிகளின் மூலம் 2255 ஏக்கர் என மொத்தம் 5108 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெரும். தொடர் மழையில் நிறைந்து ஆற்றில் வெளியேறி பாய்ந்தோடும் தண்ணீர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884