Type Here to Get Search Results !

கொட்டும் மழையில் எம்எல்ஏ ஆய்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து இடதுபுற பிரதான கால்வாய் மூலம் உபரி நீர் துரை ஏரிக்கும் அங்கிருந்து கால்வாய்கள் அமைத்து சின்னார் அணைக்கும் நீர் கொண்டு செல்ல வேண்டுமென்பது விவசாயிகளின் நீண்டநாள் கனவு தற்போது அணைகள் நிரம்பி, உபரி நீர் வீணாகும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வேப்பனஹள்ளி எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி அவர்கள் துரை ஏரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கெலவரப்பள்ளி அணையின் உபரி நீர் வரக்கூடிய மருதாண்டப்பள்ளி, வரதாபுரம் உள்ளிட்ட ஏரிகளை பார்வையிட்ட கே.பி.முனுசாமி துரை எரியிலிருந்து சின்னார் அணைக்கு செல்லக்கூடிய கால்வாய்கள் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முனுசாமி அவர்கள் கால்வாய் செல்லக்கூடிய வழியில் இருந்த பட்டா நிலத்தின் உரிமையாளரிடம் பொதுமக்களின் நலனிற்காக 11 அடி அகலத்தில் கால்வாய் அமைக்க அனுமதி பெற்று தந்தார்.

ஏறக்குறைய சூளகிரி பகுதி மக்களின் கனவு நிறைவேற்ற ஆயத்தமாகி உள்ளநிலையில், கொட்டும் மழையிலும் மக்களின் சேவையாற்ற வந்த எம்எல்ஏ கே.பி.முனுசாமி அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். சின்னார் ராமசாமி , ஜெகதீசன், நந்தக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி , மேற்க்கு ஒன்றிய செயலாளர் பாபு (எ) வெங்கடாசலம் , கேசவ செட்டி , சீனிவாச ஆச்சாரி, கபடி குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884