Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்திற்கு அதிஉயர்‌ சிறப்பு சிகிச்சை மையம்‌ தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌.S. செந்தில்‌ குமார்‌ கோரிக்கை.

சுகாதாரம்‌ கட்டமைப்புகளில்‌ பிராந்திய ஏற்றத்தாழ்வை சமன்‌ செய்யும்‌ வகையிலும்‌, மக்களுக்கு அதிஉயர்‌ சிகிச்சை எளிதில்‌ அனுகக்‌ கூடிய வகையில்‌ மற்றும்‌ மலிவு விலையில்‌ சுகாதாரப்‌ பாதுகாப்பை ஊர்ஜிதம்‌படுத்தும்‌ வகையில்‌, தாய்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலன்‌ காக்கவும்‌. தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌. S. செந்தில்‌ குமார்‌ அவர்கள்‌ தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ அதிஉயர்‌ சிறப்பு சிகிச்சை மையம்‌ தொடங்க படவேண்டும்‌ என்பதையும்‌ மற்றும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பற்றாக்குறையாக இருக்கும்‌ தாய்‌ சேய்‌ நல பயன்பாட்டுக்கு கூடுதலாக இரண்டு 102 ஆம்புலன்ஸ்‌, கோரிக்கையும்‌ அதன்‌ தேவையின்‌ அவசியத்தை ஒன்றிய சுகாதார துறை அமைச்சர்‌ மன்சுக்‌ எல்‌. மாண்டவியா அவர்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை விடுத்தார்‌. 

அதிஉயர்‌ சிறப்பு மருத்துவமனை மையத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கையும்‌ இத்துடன்‌ சமர்பித்து உள்ளதாகவும்‌, மேலும்‌ இவற்றை பிரதம மந்திரி சுகாதாரப்‌ பாதுகாப்பு திட்டத்தின்‌ கீழ்‌ செய்து தருமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளதாக கூறுகிறார்‌. 

ஒரு மருத்துவராக இத்திட்டம்‌ நிறைவேறினால்‌ சுகாதாரம்‌ பாதுகாப்பில்‌ தருமபுரி மாவட்டத்திற்கு மைல்‌ கல்லாக அமையும்‌ என்று முனைப்பாக கூறுகிறார்‌. அதே போல 102 ஆம்புலன்ஸ்‌ சேவையை கருவுற்ற பெண்கள்‌ மற்றும்‌ பிறந்த குழந்தைகள்‌ பாதுகாப்பு திட்டத்தின்‌ கீழ்‌ செய்து தர கோரியுள்ளார்‌. இச்சேவையை நிறைவேற்றினால்‌ தாய்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலன்‌ மற்றும்‌ அறிவியல்‌ பூர்வமாக மருத்துவமனையில்‌ பிரசவிக்கும்‌ முறையை ஊக்குவிக்கும்‌ என்று கூறுகிறார்‌. 

102 ஆம்புலன்ஸ்‌ சேவையை எண்ணி பார்கையில்‌, 2008 ஆம்‌ ஆண்டு அண்ணா பிறந்த நாள்‌ அன்று தமிழ்நாட்டிற்கு தலைவர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ முதலவராக இருந்த போது 108 ஆம்புலன்ஸ்‌ சேவையை தொடங்கி வைத்து மிகச்‌ சிறந்த முறையில்‌ இன்று வரை செயல்பட்டு வருவதை எண்ணி நெகிழ்வுற்றார்‌. என தனது அறிக்கையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.S. செந்தில்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884