Type Here to Get Search Results !

வரும் 1-ஆம் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு.

 

தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற நவம்பர்‌ 4-ஆம்‌ தேதி "தீபாவளிப்‌ பண்டிகை" கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பொதுமக்களின்‌ நலன்‌ கருதி 01.41.2021, திங்கட்கிழமை 02.11.2021 செவ்வாய்க்கிழமை மற்றும்‌ 03.11.2021 புதன்கிழமை ஆகிய தேதிகளில்‌ நியாயவிலைக்‌ கடைகள்‌ காலை 8.00 மணி முதல்‌ இரவு 7.00 மணி வரை செயல்படுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து நியாவிலைக்கடைகள்‌ திறக்கும்‌ நேரம்‌ மற்றும்‌ நாள்‌ குறித்து "தருமபுரி மாவட்ட வலைத்தளத்தில்‌" (https://dharmapuri.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக்‌ கடைகளிலும்‌ நியாயவிலைக்‌கடைகள்‌ செயல்படும்‌ நாள்‌ மற்றும்‌ நேரம்‌ குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌ மேற்படி வலைதளத்தின்‌ மூலமாகவும்‌ நியாயவிலைக்‌ கடைகள்‌ திறக்கும்‌ நேரம்‌ மற்றும்‌ நாள்‌ குறித்து தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம்‌. மேலும்‌ மேற்‌ கண்ட தேதி மற்றும்‌ நேரங்களில்‌ நியாயவிலைக்‌கடைகள்‌ செயல்படாத பட்சத்தில்‌ கீழ்கண்ட வட்ட வழங்கல்‌ அலுவலர்களை தொடர்புக்கொண்டு பயன்பெறலாம்‌.

தருமபுரி-9445000217, பென்னாகரம்‌-9445000218, பாலக்கோடு-9445000219, அரூர்‌-9445000220, பாப்பிரெட்டிப்பட்டி-9445000221, காரிமங்கலம்‌-9442964557, நல்லம்பள்ளி- 8122010870 மற்றும்‌ மாவட்ட புகார்‌ எண்‌: 1077 (24*7) தொடர்பு கொள்ளலாம்‌.

என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப. அவர்கள்‌ அறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884