Type Here to Get Search Results !

சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக உணவு தினம்.

கிருஷ்ணகிரி சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்பட்டது, விழாவிற்கு நுகர்வோர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். சந்திரமோகன் தலைமை தாங்கி ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் உணவுகள் வழங்கினார், பின்னர் அவர் பேசும்போது,  தமிழகத்தில் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி ஏழைகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் ஏழைகள் இருக்கிறார்கள் இங்கு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டு காலமாக ஏழைகளாக வாழ்ந்து வருகிறார்கள், இவர்களுக்கு அரசு இலவச பட்டா வழங்க வேண்டும் மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில்  அதிக அளவில் உணவு  வீணாக்கபடுகிறது இந்த உணவுகளை ஏழை எளியோருக்கு வழங்கிட வேண்டும், மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி நகரத்தில் அதிக அளவில் உணவு பொருளான ரேஷன் அரிசி கள்ள மார்க்கெட் வியாபாரிகள் கடத்தி விற்பனை செய்கிறார்கள் இவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் நுகர்வோர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆகாஷ் மகளிர் அணி தலைவி குமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884