பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது சூளகிரி காவல் நிலையத்தில் தெரியப்படுத்தவும் .
வங்கியில் பணம் செலுத்தும் போது வயதானவர்களை தனியாக அனுப்ப கூடாது எனவும் நகை , பணம் மடிக்கணினி ஆகியவற்றை வாகனங்களின் வைத்து விட கூடாது எனவும் விலை உயர்ந்த வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்திட உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மற்றும் கவனம் குறித்து சூளகிரி போலிசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்கள் மூலம் அறிவுரையும் , விழிப்புணர்வும் ஏற்ப்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன் மற்றும் சிவக்குமார் நிலைய போலீசார் கலந்துகொண்டனர்.