தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் இன்று புதியதாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 1.
28.09.2021 அன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த 70 வயது மூதாட்டி கொரோனா தொற்று காரணமாக 08.10.2021 அன்று அதிகாலை 03.50க்கு உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய RTPCR சோதனையில் 1.3% பாசிட்டிவ் முடிவுகள் அதாவது 2062 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 27,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27,315 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 269 பேர் உயிரிழந்துள்ளனர், 380 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 214 சாதாரண படுகைகளில் 166 சாதாரண படுக்கைகளும், 208 ஆக்ஸிஜன் படுகைகளில் 173 ஆக்ஸிஜன் படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை 53 இதில் 48 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.