Type Here to Get Search Results !

புட்டிரெட்டிப்பட்டியில் ஏற்காடு விரைவு ரயில் நின்று செல்ல பாமக கோரிக்கை.

புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்தில் ஏற்காடு விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாமக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலர் பி.வி.செந்தில், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

சென்னை கோவை ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை மணியம்பாடி, ஒசஹள்ளி, நல்லகுட்லஹள்ளி, கடத்தூர், லிங்கநாய்கனஹள்ளி, மடதஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, புளியம்பட்டி, சுங்கரஹள்ளி, மோட்டாங்குறிச்சி உள்பட்ட 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப் பகுதியிலுள்ள விவசாயிகள் சென்னை, கோவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு சாமந்தி, செண்டுமல்லி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள், காய்கறிகளை எடுத்துச் செல்ல புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

அதேபோல், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஏற்காடு விரைவு ரயிலை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்க நேரத்தில் புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்தில் ஏற்காடு விரைவு ரயில் நின்று செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா தாக்கம் குறைந்த நிலையிலும், ஏற்காடு விரைவு ரயில் புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சென்னை கோவை ரயில்வே வழித்தடத்தில் உள்ள புட்டிரெட்டிப்பட்டியில் ஏற்காடு விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884