Type Here to Get Search Results !

4.50 இலட்சம் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 13-ஆம் வட்ட மாநாடு, சாலை விநாயகர் கோவில் சாலை, ஸ்ரீ பூபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு அணைத்து அரசு ஊழியர்களிக்கும் பழைய ஓய்வூதிய முறையை கடைபிடிக்கவும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரன்விடுப்பு, ஊதியகுழுக்களின் முடக்கப்பட்ட 12 மற்றும் 21 மாத நிலுவை தொகைகளை மீள வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், வன ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், MRB செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவர்க்கும் காலமுறை ஊதியம் வழங்கிட, காலியாக உள்ள சுமார் 4.50இலட்சம் பணியிடங்களை உடனேயே நிரப்பவும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்விழாவில் ஆர் ஜெயவேல் வட்டத் தலைவர், குமரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், பிரிண்ட்ஸ் வட்ட துணைத் தலைவர், சுருளிநாதன் மாவட்ட தலைவர், விஜயகுமார் வட்டச் செயலாளர், கதிரவன் வட்ட பொறுப்பாளர், மற்றும் வட்ட மாவட்ட உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884