தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் இன்று புதியதாக 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 0. தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய RTPCR சோதனையில் 1.3% பாசிட்டிவ் முடிவுகள் அதாவது 1990 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 28,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27,573 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 271 பேர் உயிரிழந்துள்ளனர், 323 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் 214 சாதாரண படுகைகளில் 171 சாதாரண படுக்கைகளும், 233 ஆக்ஸிஜன் படுகைகளில் 217 படுக்கைகளும் 128 ICU படுகைகளில் 125 படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.