Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பென்னாகரம் மற்றும் தருமபுரி புறநகர் பகுதியில் நாளை மின் வெட்டு.

பென்னாகரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்திய நாதபுரம், ஜக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்ததகவல்களை தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும் தருமபுரி சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டி அள்ளி, அப்பாவு நகர், வெண்ணாம்பட்டி குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies