Type Here to Get Search Results !

ரோட்டரி சங்கம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலவச கண் சிகிச்சை முகாம்.

 தருமபுரியில் ரோட்டரி சங்கம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தருமபுரி ரோட்டரி சங்கம்,கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது, இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கண்ணில் புரை உண்டாகுதல், கண்ணீர்பை அடைப்பு, மாலைக்கண், மாறுகண், கண்ணில் சதை வளர்ச்சி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் 200 பேர் கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். நோயாளிகளுக்கு கோவை சென்று வர போக்குவரத்து, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த முகாமில் அனைவரும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்திருந்தனர். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் முகாமில் பங்ஙகேற்க அனுமதி அளிக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி, உறுப்பினர்கள் விவேகானந்தன், குணசீலன், கோவிந்தராஜ், கிருஷ்ணன், நெல்சன், தென்னரசு, மாரியப்பன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வரும் இச்சங்கம் கொரோனா நோய்த் தொற்று கட்டுபாடு காரணமாக சிகிச்சை முகாம் இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டதால் இன்று முதல் வாரம் தோறும் சனிக்கிழமை நாளில் கண் சிகிச்சை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884