தருமபுரி மாவட்டத்தில் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண/துக்க நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி விளம்பரங்கள் வியாபார ரீதியில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் / விளம்பர பலகைகள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்கவேண்டும்.
அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்கள் / விளம்பர பலகைகள் ஆகியவற்றை 08.09.2021க்குள் தாமாக அகற்றிக்கொள்ள சம்மந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அகற்றிக்கொள்ளாதவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.