Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (21.09.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:  தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலைகளில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது கண்டறியப்பட்டால் அந்த இடங்களை தொடர்புடைய அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு விபத்துக்களை தடுப்பதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவ்வப்போது காவல்துறையினரின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நான்கு வழிச்சாலைகளில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சாலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய பணிகளுக்கு காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

சாலைகளில் விபத்து ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழு உடனடியாக சென்று விபத்து காரணம் குறித்த விவரத்தினை அறிக்கையாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் தொடர்ந்து விபத்துகள் ஏற்படாத வகையில் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து துறையினர், சாலைகளில் அதிவேகத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் உடனடியாக அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தருமபுரி மாவட்டத்தில் விபத்தில்லா நிலையை உருவாக்கிட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா,இஆப., வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தாமோதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.முத்தையன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.தனசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884