தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) தொப்பூர் சுங்கசாவடி முதல்
தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) தொப்பூர் சுங்கசாவடி முதல்
தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.09.2021) நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கண்ட கள ஆய்வில், தற்காலிக தீர்வாக விபத்துக்களை குறைக்கும் பொருட்டு
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விபத்துக்களை
குறைக்க சில தற்காலிக தீர்வுகளை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் சுங்கசாவடி நிர்வாகிகளுக்கு
அறிவுறுத்தனார். மேலும், விபத்துக்களை குறைக்க நிரந்தர தீர்வாக எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு விரைவாக ஒப்புதல்களை
பெற திட்ட இயக்குநர், தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) அவர்களுக்கு மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், இம்மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ. மேல்
இயக்கப்படும் வாகனங்களுக்கு வேகம் கண்காணிக்கும் கருவி (Speed Radar Gun)
மூலம் கடந்த 28.06.2021 முதல் e-Challan மூலம் அபராதம் விதிக்கப்பட்டு
வருவதையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
ஆய்வின் இந்த போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.ச.கலைச்செல்வன், இகாப., துணைப் போக்குவரத்து ஆணையர் (சேலம் சரகம்)
திரு.கே.எம்.பிரபாகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், காவல்
துணை கண்காணிப்பாளர் திரு.அண்ணாதுரை, இயக்கூர்தி ஆய்வாளர் (நிலை -1)
ஏ.கே.தரணீதர், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.செந்தில், தொப்பூர் காவல் ஆய்வாளர்
தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், தொப்பூர் சுங்கசாவடி மேலாளர் மற்றும்
நிர்வாகிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.