Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சம்பா பருவ நெல் பயிரினை விவசாயிகள் காப்பீடு செய்ய 15.11.2021 கடைசி நாள் - ஆட்சியர் அறிவிப்பு.

சம்பா பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரினை விவசாயிகள் காப்பீடு செய்ய 15.11.2021 கடைசி நாள் ஆகும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா, நெற்பயிரை 15.11.2021-க்குள் காப்பீடு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல். 

ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இதுகுறித்து மாவட்ட தெரிவித்துள்ளதாவது. 

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடை பிடிப்பதை ஊக்குவிக்கவும், தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு நடப்பாண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.முக்கியமாக இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடேட் மூலம் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா பருவங்களில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பா பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரினை பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் நெல் பயிரினை காப்பீடு செய்ய 15.11.2021 கடைசி நாள் ஆகும். விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.521.25 பிரிமீயம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே, சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா, நெல் பயிரினை காப்பீடு செய்துக் கொள்ளலாம்.

கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகி றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னர் விரைவில் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884