சூளகிரியில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளியில் சூளகிரி போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது கங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(45) என்பவர் இருசக்கர வாகனத்தில் கர்நாடகா மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.சாக்குப்பையில் இருந்த 250 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மதுபாட்டில்களின் மதிப்பு 10000 ரூபாய் இருக்கும் என்கிற நிலையில் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணனிடம் சூளகிரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக