தருமபுரி மாவட்டத்தில் அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக முன்னறிவிக்கப்பட்ட மின் தடைகள் செய்வது வழக்கம் அதன் படி கடத்தூர் கோட்டம்- இருமத்தூர் 33/ 11 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வருகின்ற 07.08.2021 சனிக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதால் இருமத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி. சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை,சமத்துவபுரம், அக்ரகாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூர், வெண்ணாம்பட்டி,பட்டகப்பட்டி, பெரமாண்டபட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்களம், கொண்ரம்பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் 07.08.2021 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ர. ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.