Type Here to Get Search Results !

Dr. APJ. அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் மக்கள் விழிப்புணர்வு சமூக சேவை மையத்தின் மூலமாக ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 1000 சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் மூலம்  1000 இடங்களில்  கலாம் நம் வழிகாட்டி என்ற பெயரிலே பொதுமக்களுக்கு உணவு, கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மக்கள் வழிகாட்டி சமூக சேவை மொரப்பூர் ஒருங்கிணைப்பாளர்  சத்தியநாதன் எம்.ஏ.எம்.எட் ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக மொரப்பூர் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. உமாராணிஉலகநாதன், கவிதாபோஸ், விப்ரோ தொண்டு நிறுவன இயக்குனர் திரு வெங்கடேசன், சமூக செயல்பாட்டாளர் ஈச்சம்பாடி தமிழ், கமலக்கண்ணன், மேகம் சின்னத்தம்பி, சுதர்சன், லோகேஷ், வேலன் டெக்டைல்ஸ் சக்திவேல்  மற்றும்  சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies