Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாட்டம்! போலீஸ் சோதனையில் 7 பேர் கைது; இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.


காரிமங்கலம் – செப்டம்பர் 07:


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாடியதாக 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி, பைசுஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


அப்போது சிவன் கோவில் அருகே உள்ள மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அப்புகுமார் (35), பூவன் (32), கபிலன் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதேபோல், முனியப்பன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக ஜெகதீஷ் (32), நதீஷ் (31), மோகன் (45) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்தும் சூதாட்ட பணம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


காரிமங்கலம் பகுதியில் ஒரே நேரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies