Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான மென் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.


தருமபுரி, மார்ச். 03:


தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறையில், “இலக்கியத்தில் இருந்து தலைமை பண்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய அளவிலான மென் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.


இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மென் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் திருமதி லாவண்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இரண்டு அமர்வுகளில் மென் திறன் மேம்பாட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்தும், ஆங்கில இலக்கியப் பயிற்சி மூலம் தலைமைத்துவ திறன் இயல்பாக மேம்படும் விதம் குறித்தும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கமளித்தார். மேலும், வேலை நேர்காணல்கள் மற்றும் குழு விவாதங்களில் (Group Discussion) கலந்து கொள்ளும் போது மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.


நிகழ்வுக்கு முன், ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் சி. கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியருமான முனைவர் கிருத்திகா வரவேற்புரை வழங்கி, நிகழ்வின் நோக்கம் குறித்து விளக்கினார். இறுதியில் கௌரவ விரிவுரையாளர் முனைவர் சரண்யா நன்றியுரை வழங்கினார்.


பெண்கள் பங்கேற்பாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies