அந்த மனுவில் அவர் கூறியதாவது: பாலக்கோடு அருகிலுள்ள ஆத்துக்கொட்டாய், சின்னார் அணை, தொள்ளகாதனை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் ‘சிக் டேம்’ (Check Dam) கட்டப்பட்டால், விவசாயிகளுக்கு நீராதாரம் அதிகரித்து பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் வளம் பெறும். எனவே, மேற்கண்ட நீர்த்தேக்கங்களில் சிக் டேம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்போது பாலக்கோடு நகரில் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மூட்டு வலி மற்றும் பல் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்தார். அதனால், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், கொல்பதூர் – தூள் செட்டிய ஏரி தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றினால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று, கரும்பு உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உருவாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)