Type Here to Get Search Results !

ஒகேனக்கல் சுற்றுலா தளம் மற்றும் சனத்குமார் நதி தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி, மார்ச் 1:
 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவி சுற்றுலா தளம் மற்றும் தருமபுரி வட்டத்தில் நடைபெற்று வரும் சனத்குமார் நதி தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சதிஷ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஒகேனக்கல் சுற்றுலா தள ஆய்வு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் படகு இல்லம், மசாஜ் மையம், குழந்தைகள் பூங்கா, நீர்வரத்து நிலை, அருவிகள், வாகன நிறுத்தும் வசதி, நுழைவாயில், பார்வையாளர் மாடம், எண்ணெய் குளியல் இடங்கள், உடை மாற்றும் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், டிக்கெட் கவுன்ட்டர், பரிசல் நிறுத்துமிடம், உணவகம், நடைபாதை மற்றும் காட்சி கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


சுற்றுலா தளம் தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாகவும் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட்டார்.


சனத்குமார் நதி தூர்வாரும் பணி

இதனைத் தொடர்ந்து தருமபுரி வட்டத்தில் நடைபெற்று வரும் சனத்குமார் நதி தூர்வாரும் பணிகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். நதியில் நீரேற்றம் சீராக இருக்கவும், வெள்ளப்பெருக்கு அபாயம் குறையவும் தூர்வாரும் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, தருமபுரி வட்டாட்சியர் திரு சுகுமார், பென்னாகரம் வட்டாட்சியர் திரு சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு லோகநாதன், திரு சக்திவேல், பொது பணித்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies