Type Here to Get Search Results !

நான் முதல்வன் SCOUT திட்டம்: வெளிநாட்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.


தருமபுரி, மார்ச். 04:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டம் (SCOUT – Scholars for Outstanding Undergraduate Talent) திட்டத்தின் கீழ் வெளிநாட்டு தொழிற்பயிற்சியை நிறைவு செய்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., பாராட்டினார்.

தருமபுரி அரசினர் பொறியியல் கல்லூரி தருமபுரியில் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயிலும் நான்கு மாணவ, மாணவியர்கள் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் இரண்டு வார தொழிற்பயிற்சி மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.


வெளிநாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள்

  • மாணவி எஸ். ஹசீரா – தென் கொரியாவின் பூசான் தேசிய பல்கலைக்கழகம்

  • மாணவன் எஸ். பாலாஜி

  • மாணவி டி. சதிதா

  • மாணவி எஸ். சுதர்ஷினி


மேற்கண்ட மூவர் பஹ்ரைனில் உள்ள அஹ்லியா பல்கலைக்கழகம்யில் தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர்.


அண்ணா பல்கலைக்கழக தரவரிசை மாணவர்களுக்கும் பாராட்டு

இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் தேர்வில் தரவரிசை பெற்ற மாணவிகள் பி.ஆர். ஹர்ஷினி, கே.எஸ். புவனேஷ்வரி, ஆர். மௌனிகா மற்றும் மாணவன் ஆர். குருசாமி ஆகிய அமைப்பியல் துறை மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். இந்நிகழ்வில் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் உடனிருந்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies