Type Here to Get Search Results !

தருமபுரி நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தருமபுரி, மார்ச் 2:


தருமபுரி நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில், தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாநில மருத்துவரணி இணை செயலாளர் அசோகன், பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies