Type Here to Get Search Results !

வரும் 26ம் தேதி தருமபுரியில் ஒரு நாள் முழு கடையடைப்பு; புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க கோரிக்கை.


தருமபுரி, பிப். 23:
 


தருமபுரி நகரில் உள்ள தருமபுரி நகர வணிகர் சங்கம் சார்பில், பி.ஆர். ராஜகோபால் கவுண்டர் (பழைய) புறநகர் பேருந்து நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் இயக்க வலியுறுத்தி ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய பேருந்து நிலைய மாற்றத்தால் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, பழைய புறநகர் பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

போராட்ட விவரங்கள்:

  • நாள்: 26.02.2026 (வியாழக்கிழமை)

  • நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

  • பகுதி: தருமபுரி நகரம்

  • கோரிக்கை: பி.ஆர். ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய இடத்திலேயே இயக்குதல்


இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவு அளிக்குமாறு வணிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies